ஊழலின் ஊற்றுக்கண்

ஊழலின் ஊற்றுக்கண் இந்தியா என்பது போன்ற ஒரு தோற்றத்தை வெளிநாட்டினருக்கு நம் ஆள்வோர்கள் ஏற்படுத்திவிட்டனர்.
ஆம் பிறகென்ன?

தோண்டத்தோண்ட மண் அள்ள ஊழல் கர்நாடகாவில்.
அலைகற்றையோ அலை அலையாய் ஊழல் அலை.
காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் விலையாடுகிறது.
அடுக்குமாடி வீட்டில் அடுக்கடுக்காய் ஊழல்.
இஸ்ரோவிலும் எஸ்.பாண்டு ஊழலாம் வின்வெளியில் பறக்கிறது ஊழல்.
ஒற்றை வரியில் சொல்வதென்றால் கடவுள் போல் வியாபித்திருக்கும் ஊழல் என்று தினமணி தலையங்கத்தில் சொல்லியது கல்லில் செதுக்கும் வார்த்தை.
ஊழலை ஒழிக்கவே ஒரு தனிதுறை அமைச்சர் போடலாம் நல்ல யோசனைதான். அதில் ஊழல் முளைத்தால் என்ன பண்ணுவது என்று ஒரு தயக்கம் இருக்கலாம்.

அதிகபட்ச ஏழைகளை கொண்டிருக்கும் நாடு,அரசியல்வாதிகள் முதற்கொண்டு,ஆன்மீகவாதிகள் வரை, அதிகாரிகள் முதல் கவுன்சிலர்வரை இந்த அளவுக்கு ஊழல் செய்தும்,எல்லாதுறைகளும், ஊழலில் ஊறியும்,நாறியும்கூட இந்தியா தாக்குபிடிக்கற தென்றால்? ஆச்சரியத்தில் விளிம்பில் உள்ளனர், உலக அரசியல் நோக்கர்கள்.இது சம்பந்தமான கட்டுரைகளை தேடிப்பிடித்து படிக்கும்போதும் இன்னும் ஆச்சரியம் ஊட்டும் சங்கதிகளும் கிடைக்கத்தான் செய்கிறது,
ஊழலை ஒழிக்க வேண்டுமானால். ஊடகங்கள் - தொண்டு நிறுவனங்கள்- பொதுமக்கள் என்று முத்தரப்பு ஒத்துழைப்போடு ஜனநாயகம் வழங்கிய அனைத்து வழிகளிலும், செயல்பட்டால் நிச்சயம் ஒழித்துவிடலாம்,அல்லது வெகுவாக குறைத்துவிடலாம்.அன்று வெள்ளையன் கொள்ளையடித்தான், இன்றோ? நம்மவன் கொள்ளையடிக்கின்றனர்.இவற்றையெல்லாம் தாங்கி நம்பாரதமாதா வீறுநடை போடுகிறாள் என்றால் அது நிச்சயம் இந்த நாட்டை கடவுள் நேசிக்கிறார் என்றுதான் அர்த்தம்,அது எந்த கடவுள்? என்றெல்லாம் மூக்கை நுழைக்கவேண்டாம்,எந்தக்கடவுளாவாது இருந்து விட்டு போகட்டும், ஊழல் சம்பந்தமான சில குறிப்புகள்: - எல்லாம் அதுவாம் இதுவாம் வகைகள்.என்றாலும் அதுமட்டும் அல்லவாம்.

இந்த ஊழல் - கருப்புப்பணத்தில்.

1) இந்தியாவின் மொத்தக்கடனை அடைத்துவிடலாமாம்.
2) மொத்தக்கடனையும் அடைத்துவிட்டு ஆளுக்கொரு ஐந்தாயிரம் இந்த பிடி என்றும்
சொல்லலாமாம்.
3) வளர்ந்த அரபுகள் நாடுகள் போல் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை/வசிக்கும்
கட்டிடம்/தண்ணீர்/மின்சாரம்/மருத்துவம்/கல்வி/சுகாதாரம்/தனிநபர் வருமாணம்
ஆகியவற்றில் அரபுநாடுகளுக்கு நிகராக நாம் இருக்கலாமாம்.
4) ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நம்புராணத்தை(அந்தப்புராணம் அல்ல)பாட
ஆரம்பித்துவிடுவார்களாம்,
5) தென்கிழக்காசியாவில் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக ஆகிவிடுவோமாம்.
6) வேலையில்லா திண்டாட்டம் காணாமல் போய்,ஆசியாவிற்கே வேலை கொடுக்கும்
சக்தியாக மாறிவிடுமாம்,(சாரி அந்த "சக்தி" அல்ல)
7) தென்கிழக்காசியாவின் வணிக மையமாகவும்,ஆசியாவின் வணிக சந்தையாகவும்
விடுமாம்.
8) எல்லாவற்றையும் மீறி, ஐ.நா. அங்கீகரித்தே ஆகவேண்டிய "வல்லரசு"பட்டம்
கிடைத்துவிடுமாம்.
9) பாலும் தேணும் ஓடும் நம்பாரதத் திருநாடு என்று பாரதி கண்ட தேசமாக உண்மையில்
மாறுமாம்,
10)தேசத்தின் தனிப்பெரும் வளமை கொண்ட கௌரவம் உலக அரங்கில் தலைநிமிருமாம்.
பி.கு. சரி இதெல்லாம் நம் நாட்டிற்கும் மக்களுக்கும் கிடைக்காத வகையில் செய்யும்
தேசப்பற்றாளர்கள்
யார்? நாம் தேர்ந்தெடுக்கும்ம் அரசியல்வாதிகள். அவர்கள் நியமிக்கும் அதிகாரிகள்.

இறுதியும் - உறுதியும் கவிதை

எண்ணமும் எழுத்தும்:- வலைப்பூ ஆசிரியர்.
==========================================
எததனை காலம் வாழப்போகிறாய் மனிதா? நீ எத்தனை காலம் வாழப்போகிறாய்?
நீ வந்த பாதையை விட போகும் பாதையே வெகு அருகே
ஆனாலும் அது பற்றி நீ கவலை கொள்ளவில்லை.
எப்படியோ வாழ்கிறாய். அது ஒரு குறுகிய காலமே.
ஆனால் நீ செல்லவிருக்கும் ஊரோ புது யுகமே.
சென்றவர் அதுபற்றி உனக்கு எச்சரிக்கவில்லை. வந்தவருக்கோ அது பற்றி தெரிய நியாயமில்லை. உதித்ததை உதிர்த்தால்? உறைக்கவில்லை,

உனக்குள்ள சொத்துக்கள் ஏழு தலைமுறைக்கு உள்ளதாம் !!!
ஆனால் நீயோ? உன் தலைமுறையில் குறுகிய கால வயதுக்காரன் !!!
முடிவு எப்படியிருந்தாலும், முடிவு, முடிவுக்கு வரும்போது, எல்லாம் முடிந்துவிடுகின்றது.
ஊண், உறக்கம், ஓய்வு, தனிமை, இனிமை, என வாழ்வின் எல்லா பரிமாணங்களை, யாருக்காக இழக்கிறாய்? உனக்கென்றால் அது ஒட்டாது,ஊருக்கென்றால் அது நிலைக்காது,
பிள்ளைகளுக்கென்றால் அது போதாது,

சில்லறையாய் சேர்த்த பணம்.சீர்கேடு விளிம்பில்.
அனுபவிக்கவோ நீயில்லை.உறவினர் சோக விளிம்பில்.
எதிர்பாராதது நடக்கும்போதுதானே திகில். ஆம் நீ நினைக்காததே நடந்தது.
மதம் மீறி நம்பும் ஒன்று மரணம்,அதில் எல்லாமே சரணம்.

சேர்த்தவைகளை அனுபவிக்காத நிலை ஒரு கொடுமை,
போகும் இடத்துக்கு சேர்க்காததோ அதைவிட கொடுமை.
சேர்க்கும்போதே தெரியாதா அனுபவிக்கமாட்டோம் என்று.
இறக்கும்போது தெரியாதா கொண்டுபோகமாட்டோம் என்று.

பலரின் உரிமைகளை, உடமைகளை, உணர்வுகளை, வளங்களை, வாழ்வுகளை, வசதிகளை, வாழும்காலத்தில் உனதாக்கிக்கொண்டாய்.
ஆனால் நீ?? கல்லறையின் மண்ணாகிப்போனாய்.

வாழும்போது மனித உருவின் மிருகமாய்,
இறக்கும்போது மனித எண்ணங்களின் இறுக்கமாய்.

வங்கியில் உன் கணக்கில் ஏராளம்,
மறுமையில் உன் கணக்கில் பாதாளம்.


அரசர்கள் முதற்கொண்டு ஆண்டிகள் வரையும்,
மன்னர்கள் முதற்கொண்டு மண்ணாங்கட்டி வரையும், மரணம் யாரை விட்டதப்பா?

உலகின் மூவர் மட்டுமே இறப்பை கண்டு அஞ்சுவதில்லை.
லட்சிய போர்வீரன்,
உலகம் சேர்க்காதவன்,
மறுமைக்காக சேர்த்தவன்
இந்த பட்டியலில் ஒன்றில் கூட நீ இல்லை.

பதவியில் உள்ளவர் இருந்தால் ராணுவ அணிவகுப்பு.
வசதியில் உள்ளவர் இறந்தால் ஊரார் அணிவகுக்ப்பு,
வறுமையில் உள்ளவர் இறந்தால் சிலரால் அணிவகுப்பு,
உன்னை விட்டு செல்வதில் அனைவரும் அணிவகுப்பு.

வாழ்ந்தோம் இறந்தோம் என்பது மிருகமப்பா,
வாழ்வோர் மனத்தில் இருத்தலென்பது மனிதனப்பா.
அறுபது எழுபது ஆண்டுக்கால வாழ்வு நிலையல்லவே,
ஆயுள்முடிவுவில் ஈமான் இல்லையேல் நிறைவில்லையே.

சாணில் சாணக்கியனாய், முழத்தில் முட்டாளாய், முயற்சிக்கு முற்றுவை.
படித்தது அறிவாயினும் பட்டதே மேன்மையானது.
பட்டதை பகர்வதும், படிப்பினை பெறுவதும் மனித இயல்பு.
எண்ணத்தை அழகாக்கு,எண்ணியதை எழுத்தாக்கு.
=============================================================
எண்ணமும் எழுத்தும்:- வலைப்பூ ஆசிரியர்.

தினமணியின் மணிமகுடத் தலையங்கம்

தீவிரவாதத்தை அடக்கும் முறையை [ அடக்குமுறையல்ல ] சரியாய் புரிந்துகொள்ளவியலாதவர்கள், இத்தலையங்கத்தை ஒருமுறைக்கு இருமுறை படிக்கலாம்.

பள்ளிக்கூடத்தில் வாத்தியாரின் பெஞ்சினில் வைக்கப்படும் ஊசிவழியே துவங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, பால பரிணாமம் பெற்று, பன்முகம் கொண்டு, வளர்ந்து, வன்மம் பெறுகிறது.

மறுக்கப்படும் நீதி, மறைக்கபடும் உண்மை, மறக்கப்படும் நலன், பறிக்கப்படும் உரிமை, இவையெல்லாம் ஒன்று கூடித்தான் "மாற்றம்"பெற்று "வைரஸாக" மாறி ஒரு நாள் அது "ஏதாவது ஒரு பெயரில்" வெளிப்படலாம்,அதற்கு சமூகம் என்ன பெயர் கொடுக்கிறது என்பது பற்றி அவர்கள் கவலைபடுவதில்லை.காட்டில் வாழும் விலங்கினத்தையே தமக்கு ஆதரவாக பழக்கப்படுத்தி, மாற்றும் திறன் கொண்ட மனிதன் ,தம்மை போன்ற மனிதர்களை மிருகமாக்குகிறான் என்பதே உண்மை, தீவிரவாதிகளும் மனிதர்களே,அவர்களையும் "அதிகபட்சம்" திருத்தமுடியும்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது எனும் பழமொழியும், பூனையே ஆனாலும் அடைத்து வைத்து துன்புறுத்தினால் புலியாக மாறும் என்பதும் நமக்குணர்த்தும் பாடங்களாகும்,
தேவை, மாற்றமும், நல்அணுகுமுறையும் தான். [ வலைப்பூ ஆசிரியர் ]
===============================================================================
நன்றி - தினமணி:- தலையங்கம் 07-07-2010

காஷ்மீர் பள்ளத்தாக்கு மீண்டும் பற்றி எரியத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி தொடங்கிய அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் இதுவரை 14 உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது. இதில் வேதனைக்குரிய விஷயம் பலியான அத்தனை பேரும் இளைஞர்கள் என்பது. ஒன்பது வயதுச் சிறுவனிலிருந்து அதிகபட்ச வயது 25 வரையிலான இளைஞர்கள் பாதுகாப்புப் படையினரின் குண்டுகளுக்குப் பலியாகி இருக்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் என்கிற பெயரில் ராணுவத்தினரைத் தாக்க அணி திரண்டபோது, தங்களைத் தற்காத்துக் கொள்ள ராணுவம் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 15 காவல்துறையினர் உள்பட 35 பேருக்குக் காயம் ஏற்பட்டது. 12-வது வகுப்பில் படிக்கும் 17 வயது துஃபேயில் அகமது மாத்தோ என்கிற சிறுவனின் மரணம் எதிர்பாராதது.

கடந்த ஒரு மாதமாகக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்து வரும் ராணுவத்துக்கும் அரசுக்கும் எதிரான போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர் என்பதைவிட, தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதுதான் சரியாக இருக்கும். துப்பாக்கிப் பிரயோகம் நடந்தால் நிச்சயமாகப் பலியாவோம் என்று தெரிந்தும் இளைஞர்கள், கல்லையும், உருட்டுக் கட்டைகளையும் தூக்கிக் கொண்டு கூட்டம் கூட்டமாக ராணுவ முகாம்களைத் தாக்கப் புறப்படுவதை வேறு எப்படித்தான் வர்ணிப்பது?

ஒவ்வொரு மரணத்தையும் தொடர்ந்து சடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, பெரும் கூட்டம் அணி திரள்கிறது. தற்காப்புக்காகக் காவல் துறையினரோ, ராணுவமோ துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியது என்பதை, மரண துக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? ஊர்வலத்தில் ராணுவத்துக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. திடீரென்று ஆத்திரத்தில் ஓர் இளைஞன், பாதையின் இருபுறத்திலும் பாதுகாப்புக்கு நிற்கும் ராணுவத்தை நோக்கிப் பாய்வதும், கூட்டம் வெறிபிடித்தாற்போல அவனுக்குப் பின்னால் ஓடுவதும், மீண்டும் துப்பாக்கிச் சூடு... மரணங்கள்... குண்டடிபட்ட காயங்கள்...

கடந்த 2008-ம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது, மக்கள் ஆவலுடனும், ஆர்வத்துடனும் பெருந்திரளாக வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்ததைப் பார்த்து உலகமே வியந்தது. வன்முறையாளர்களின் அச்சுறுத்தலை சட்டை செய்யாமல் ஆண்களும் பெண்களும் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். அவர்களது நம்பிக்கை ஒன்றரை ஆண்டுகளில் தகர்ந்து விட்டதே, ஏன்?

இத்தனைக்கும் காஷ்மீர முதல்வர் ஒமர் அப்துல்லா கெட்ட பெயர் எதுவும் சம்பாதித்துவிடவில்லை. நல்லவர் என்கிற நன்மதிப்பு இருக்கிறது. ஆட்சி செய்ய நல்லவராக மட்டும் இருந்தால் போதாதே, வல்லவராகவும் இருக்க வேண்டுமே. அதுதான் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்று தோன்றுகிறது. நடைபெற்று வரும் வன்முறை மற்றும் கலவரங்களுக்குப் பாகிஸ்தானின் ஆசிர்வாதத்துடன் இயங்கும் லஷ்கர்தான் காரணம் என்றும், தேசவிரோத சக்தியான ஹுரியத் போன்ற அமைப்புகள்தான் காரணம் என்றும் பழிசுமத்துவதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

வெற்றிகரமாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் பயனாய் ஓர் இளைய தலைமுறை அரசியல் வாரிசின் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, ஜனநாயக உணர்வைப் பலப்படுத்தி இருக்க வேண்டும். காலம் கடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவிலேயே உள்ளாட்சி அமைப்பு என்கிற ஒன்று செயல்படாமல் இருக்கும் ஒரே மாநிலம் ஜம்மு காஷ்மீரம் மட்டுமே!

சட்டப்பேரவைத் தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 45 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முதல்வர் ஒமர் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 17 இடங்களைத்தான் வென்றது. ஒருவேளை, உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால், பெருவாரியான உள்ளாட்சி அமைப்புகளை பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுவிடுமோ என்கிற அச்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தள்ளிப்போட்டதுதான் முதல்வர் அப்துல்லா செய்த மிகப்பெரிய தவறு.

வன்முறையால் பாதிக்கப்பட்டு, வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்துவிட்ட நிலையில், முறையான ஜனநாயகம் மூலம் மட்டுமே அடிப்படை வசதிகளுடன் நிம்மதியாக வாழ முடியும் என்கிற நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருந்தனர் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள். அச்சுறுத்தலை மீறித் தேர்தலில் அவர்கள் வாக்களித்ததற்குக் காரணமே, தங்களுக்கு முறையான நிர்வாகம் வேண்டும், அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதால்தான். இதைப் புரிந்துகொண்டு செயல்படாதது யாருடைய தவறு?

தேர்ந்தெடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் சரி, தங்களது தொகுதிக்கு ஒருமுறைகூடத் திரும்பிச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. முதல்வர் அப்துல்லாவோ, தானே மக்களின் குறைகளைக் கேட்டுத் தீர்க்க விரும்புகிறாரே தவிர, முறையான அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டால், எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்று, மக்களின் செல்வாக்கைப் பெற்று விடுவார்கள் என்று பயப்படுகிறார். இந்த நிலையில் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பது யார்? அதற்கு ஜனநாயகம் இடம் கொடுக்காவிட்டால், வன்முறையில் ஈடுபடுவதை எப்படிக் குற்றம் கூற இயலும்?

துப்பாக்கி ரவைகள் பாயும், சாகப் போகிறோம் என்று தெரிந்தும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்தை எதிர்க்கத் தெருக்களில் இறங்கத் தயங்காத நிலையில், ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இளைஞர்களின் கோபத்தைத் தணிக்கத் துணிவுடன் களமிறங்க ஏன் தயங்குகிறார்கள்? இது உயிர்ப் பாசமா, பதவிப் பாசமா?

மக்களின் உணர்வுகளை ஓர் அரசு புரிந்து கொள்ள முடியாவிட்டால், துப்பாக்கி ரவைகளால் அவர்களது ஆத்திரத்தை அடக்கிவிட முயற்சிப்பதும் இயலாத ஒன்று. காஷ்மீர் பள்ளத்தாக்கின் உடனடித் தேவை பாதுகாப்பு நடவடிக்கையும், அடக்குமுறையும் அல்ல. அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளியை அகற்றுவதற்கான முயற்சிகள்!
நன்றி - தினமணி:- தலையங்கம் 07-07-2010

மண்வளத்திலேதான் மனிதவளம்

நன்றி:- தினமணி
[ கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதையே சற்று மாறி "நிலம் விற்று வளம் வாங்குகிறோம்.முடியுமா? படிக்க மட்டுமல்ல படிப்பிணைக்காகவும் ]

விவசாயத்தைக் காப்பாற்ற சிந்தனைக் குழுக்களை உருவாக்க வேண்டும்: ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி

First Published : 06 Jul 2010 02:18:32 AM IST

Last Updated :


திருச்சி, ஜூலை 5: விவசாயத்தைக் காப்பாற்ற சிந்தனைக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்றார் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி.

÷கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், திருச்சியில் உழவர் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் உழவர் தினப் பேரணி மற்றும் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:

÷நமது நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் நன்றாக இருந்தது. நாட்டின் வருமானத்தில் 60 சதவீதம் விவசாயத்தின் மூலமாகக் கிடைத்தது.

÷ஆனால், இன்றைக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் 11.4 சதவீதம்தான் விவசாயம் மூலம் கிடைக்கிறது. இதை விவசாயத்தின் வீழ்ச்சி என்றுதான் கூற வேண்டும்.

÷அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்தினரும், பிரான்ஸில் 9 முதல் 10 சதவீதத்தினரும், மேற்கத்திய நாடுகளில் 2 முதல் 3 சதவீதத்தினரும் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த நாட்டில் விவசாயிகளற்ற விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், நமது நாட்டில் விவசாயிகள் மூலம்தான் விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

÷விவசாயத்தைப் பற்றி பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் மூலமாக புரிந்து கொள்ள முடியாது. இன்றைய நிலையில் 100 கி.மீ. இடைவெளிக்குள் விவசாயம் வேறுபடுகிறது. விவசாய நிலமும், அதன் குணமும் வேறுபடுகிறது.

÷நமது நாட்டில் இன்றைக்கு 2 லட்சம் நெல் ரகங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமான விவசாயம் நமது நாட்டில் இல்லை. விவசாயிகளின் பிரச்னையை விவசாயிகளால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

÷விவசாயப் பிரச்னை பொருளாதாரம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, கலாசாரம், சமூகவியல், ஆன்மிகம், பாரம்பரியம் சம்பந்தப்பட்டதாகும்.

÷நமது நாட்டின் நிலப் பரப்பை விட அமெரிக்க, சீன நாடுகள் மூன்றரை மடங்கு அதிகம் நிலப் பரப்பு கொண்டவையாகும். ஆனால், நமது நாட்டில் உள்ள நிலப் பரப்பைக் கொண்டு 16 கோடி ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியும்.

÷நிலப் பரப்பு பெரியதாக இருந்தாலும் சீனாவில் 10 கோடி ஹெக்டேரில்தான் விவசாயம் செய்ய முடியும். நமது நாட்டில் உள்ள விளைநிலங்களில் சரியாகப் பயிரிட்டால் ஆசிய கண்டத்துக்கே நம்மால் உணவை வழங்க முடியும்.

÷நமக்குத் தெரிந்த விஷயத்தை படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் எல்லோரிடம் எடுத்துரைத்து சிந்தனைக் குழுக்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் விவசாயத்தைவிட நமக்குத்தான் அதிக பாதிப்பாகும்.

÷உலகின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்டது நமது நாடு. நம் நாட்டின் உணவுத் தேவையை நம்மால்தான் நிறைவு செய்ய முடியும், உலகில் நிம்மதி ஏற்பட வேண்டும் எனில் பாரத நாடு தன்னிறைவு பெற்றாக வேண்டும். அது உணவில் மட்டுமல்ல, பருப்பு வகைகள், காய்கறிகள் என எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற வேண்டும்.

÷ரசாயனம் மூலம் விவசாயம் செய்வதால் பெரிய ஆபத்து ஏற்பட உள்ளது. பாரம்பரிய விவசாயத்தைதான் மேற்கொள்ள வேண்டும்.÷போராட்டம், ஆர்ப்பாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், சிந்தனை செய்யக்கூடிய குழுக்களை விவசாயிகள் உருவாக்க வேண்டும். இந்த வேலையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு விடாமல் செய்வேன் என உறுதியேற்க வேண்டும்.

÷விவசாயத்தில் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட உள்ளது. அதற்குரிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது என்றார் குருமூர்த்தி.

இந்திய மக்களின் உயிரும் - நீதியும் விலை குறைவு

First Published : 08 Jun 2010 12:00:00 AM IST DINAMANI [courtesy]
நன்றி - தினமணி:-
1984, டிசம்பர் 2 நள்ளிரவு, டிச.3 அதிகாலை:
யூனியன் கார்பைடு இந்தியா ஆலையிலிருந்து நச்சுவாயு மீதைல் ஐசோசயனைடு வெளியேறல். 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு; 5 லட்சம் பேர் பாதிப்பு.
டிசம்பர் 4: நிறுவனத் தலைவர் வாரென் ஆண்டர்சன் உள்ளிட்ட 9 பேர் கைது. ஆனால் 2,000 டாலர் ஜாமீன் தொகை கட்டி, மீண்டும் இந்தியா வருவதாகக் கூறி அமெரிக்கா சென்றார் வாரென் ஆண்டர்சன், ஆனால் அவர் வரவேயில்லை. 10-வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு நிறுவனம் சேர்ப்பு.
1985, பிப்ரவரி: அமெரிக்க நீதிமன்றத்தில் 330 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி இந்திய அரசு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு.
1986: அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், யூனியன் கார்பைடு நிறுவனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்தியாவுக்கு மாற்றல்.
1987, டிசம்பர்: வாரென் ஆண்டர்சன் மற்றும் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு. பெருமளவு மக்கள் படுகொலைக்குக் காரணமானதற்காக ஆண்டர்சனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
1989, பிப்ரவரி: இந்திய அரசுடன் யூனியன்
கார்பைடு நிறுவனம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரச உடன்படிக்கை செய்தது. இதன்படி 43 கோடி டாலர் இழப்பீட்டை யூனியன் கார்பைடு அளித்தது.
1989, பிப்ரவரி-மார்ச்: மிகக் குறைவான இழப்பீட்டைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல ரிட் மனுக்கள் தாக்கல்.
1992: இழப்பீட்டுத் தொகையான 43 கோடி டாலரில் பகுதியளவு போபால் மக்களுக்கு வழங்கப்பட்டது.
1992, பிப்ரவரி: நீதிமன்ற நோட்டீûஸ புறக்கணித்ததாக வாரென் ஆண்டர்சன் மீது குற்றச்சாட்டு.
1994, நவம்பர்: வாயுக் கசிவில் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த போதிலும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பங்குகளை கோல்கத்தாவைச் சேர்ந்த மெக்லாய்ட் ரஸ்ஸல் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு விற்க அனுமதி.
1996, செப்டம்பர்: இந்திய அதிகாரிகளுக்கெதிரான வழக்கின் தீவிரத்தை உச்ச நீதிமன்றம் குறைத்தது.
1999, ஆகஸ்ட்: யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தோடு இணைக்கப்பட்டதாக அறிவிப்பு.
1999, நவம்பர்: அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச தொண்டு நிறுவனம் கிரீன் பீஸ் அமைப்பினர் இப்பகுதியில் நிலம் மற்றும் தண்ணீரை சோதித்ததில் பல்வேறு நச்சு ரசாயனப் பொருள் மற்றும் பாதரசத்தின் அளவு வழக்கத்தைவிட 60 லட்சம் மடங்கு அதிகம் இருப்பதாக சோதனையில் கண்டறிந்தனர்.
1999, நவம்பர்: விஷவாயு தாக்குதலில் உயிர் பிழைத்தோர்,யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராகவும், அதன் தலைவர் வாரென் ஆண்டர்சனுக்கு எதிராகவும் நியூயார்க் நகர நீதிமன்றத்தில் குற்ற வழக்குப் பதிவு.
2001, பிப்ரவரி: இந்தியாவில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் நேர்ந்த வாயுக் கசிவுக்கு பொறுப்பேற்க அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு ஆலை நிர்வாகம் மறுப்பு.
2002, ஜனவரி: சிருஷ்டி என்ற அமைப்பு நடத்திய சோதனையில் இப்பகுதியில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் பாதரசம் மற்றும் காரீய அளவு அதிகமாக இருப்பதை சோதனை மூலம் கண்டறிந்தது.
2002, ஜூன்: வாரென் ஆண்டர்சனுக்கு எதிரான வழக்கை மத்திய அரசு கைவிடப் போவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்கள் தலைநகர் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2002, ஆகஸ்ட்: வாரென் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனிடையே வாரென் ஆண்டர்சனைக் காணவில்லை என அமெரிக்கா தெரிவித்த நிலையில் அவர் நியூயார்க்கில் இருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
2002, அக்டோபர்: போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையை சுத்தப்படுத்த கடும் எதிர்ப்பு. அதில் மேலும் பல ஆயிரம் டன் நச்சுக் கழிவுகள் இருப்பதாக புகார்.
2003, மே: வாரென் ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை.
2004, மார்ச்: போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையை இந்திய அரசு அனுமதித்தால் சுத்தப்படுத்தித் தரலாம் என்று டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.
2004, ஜூன்: இந்திய அரசிடம் வாரென் ஆண்டர்சனை ஒப்படைக்க அமெரிக்கா மறுப்பு. இருதரப்பு ஒப்பந்தத்தில், குற்றவாளிகளை ஒப்படைப்பது குறித்து ஒப்பந்தத்தில் சில பிரிவுகள் வாரென் ஆண்டர்சனை ஒப்படைப்தற்கான வரையறைக்குள் வரவில்லை என தெரிவித்தது.
2004, ஜூலை 19: ஏற்கெனவே ஒப்புக்கொண்ட 47 கோடி டாலர் இழப்பீட்டைத் தவிர ரூ. 15 கோடி கூடுதலாக தரவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. 1992-ம் ஆண்டிலிருந்து யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்கிய 47 கோடி டாலரை வைத்தருந்ததற்கு வட்டியாக இத்தொகையை வழங்க உத்தரவு.
2004, அக்டோபர் 25: இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்.
2004, அக்டோபர் 26: யூனியன் கார்பைடு நிறுவனம் அளித்த 47 கோடி டாலர் இழப்பீட்டுத் தொகையை நவம்பர் 15-க்குள் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
2010, ஜூன் 7: வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளித் துதீர்ப்பு: நன்றி தினமணி

அன்னையர் நலத்தில் பின்தங்கிய இந்தியா, ஆய்வில் தகவல்" தினமணி "

"தாயில்லாமல் நானில்லை"தாயே தெய்வம்"குடியிருந்த கோயில் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே"தாயை தெய்வமாக வணங்குவது என்பன போன்றதெல்லாம் தாய்க்கு எவ்வகையிலும் பிரயோஜனமில்லை.மாறாக அவர் வாழும்வரை தேவைபடும் வாழ்வாதாரங்களான உணவு,உடை,இருப்பிடம்,மருத்துவம்,உடலுதவி,துணை,இதுவே தாய்க்கு செய்யும் பணிவிடையும் மகன் செய்யும் கடன் பணியுமாகும்,வணங்குவதெல்லாம் இறைவனுக்கு செய்யவேண்டியவையே தாய்க்கு அல்ல.தாய்க்கு பணிவிடையே அவசியம்
வணங்கவேண்டியனை வணங்குங்கள், ஆனால் வழங்கவேண்டியவைகளை வழங்குங்கள்.ஆர்.
***********************************************************************
நன்றி நன்றி நன்றி > -:தினமணி:-
First Published : 10 May 2010 01:15:32 AM IST
புது தில்லி, மே 9: அன்னையர் தினத்தைக் கொண்டாடும் வேளையில் அன்னையர் நலத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது.


அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் 77 நாடுகள் கொண்ட பட்டியலை "சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகள் நல உரிமை அமைப்பு அன்னையர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ளது.


இந்தப் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தைப் பிடித்து பின்தங்கியுள்ளது. கென்யா, காங்கோ போன்ற சிறிய நாடுகளில் கூட அன்னையர் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ அன்னையர் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் 77 நாடுகள் கொண்ட பட்டியலில் கியூபா முதலிடம் வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஆர்ஜென்டினா, பார்படோஸ், தென் கொரியா, சைப்ரஸ், உருகுவே, கஜகஸ்தான், பஹாமாஸ், மங்கோலியா நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.


பக்கத்து நாடுகளான சீனா 18-வது இடத்தையும், இலங்கை 40-வது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான் இந்தியாவை விட பின்தங்கி 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.


குறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில் அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளின் வரிசையில் வங்கதேசம் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் மொத்தம் 166 நாடுகள் கொண்ட பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்தையும், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.


இந்தியாவில் சுகாதார நலம் மோசமாக இருப்பதற்குக் காரணம் பயிற்சி பெற்ற சுகாதார நல ஊழியர்கள் இல்லாததுதான் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அரசு திட்டமிட்டுள்ளபடி 1,000 பேருக்கு ஒரு சுகாதார நலத்துறை ஊழியர் (ஆஷா பணியாளர்கள்) இந்தியாவில் இருக்கவேண்டும். 5 ஆயிரம் பேருக்கு ஒரு செவிலியர் இருக்கவேண்டும். ஆனால் இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற சமுக நல ஆர்வலர்களின் (ஆஷா பணியாளர்கள்) எண்ணிக்கை குறைவாக உள்ளது.


இதைப் போலவே அங்கீகாரம் பெற்ற செவிலியர்களும் குறைவாக உள்ளனர். சுமார் 21 ஆயிரம் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது.


இதுகுறித்து "சேவ் தி சில்ட்ரன்' அமைப்பின் இயக்குநர் ஷிரீன் வகீல் மில்லர் கூறியதாவது: தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும்போதும் நாட்டில் செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.


நாட்டில் ஆண்டுதோறும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 19.5 லட்சம் பேர் இறக்கின்றனர். உலகிலேயே இங்குதான் இந்த இறப்பு விகிதம் அதிகம்.


அதைப் போல குழந்தைப் பிறப்பு மற்றும் கர்ப்ப காலத்தின்போது ஆண்டுதோறும் இந்தியாவில் 67 ஆயிரம் பெண்கள் இறக்கின்றனர். திறமையான சுகாதார ஊழியர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.


சரியான மருத்துவ சிகிச்சை பெற்றால் இறக்கும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 63 சதவீதம் பேரைக் காப்பாற்றிவிடலாம்.


அதைப் போலவே ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும், உடல் நலம் குன்றிய குழந்தையும் டாக்டர்களைப் பார்த்து சிகிச்சை பெற்றால் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால் கிராமப்புற பகுதிகளில் இது சாத்தியம் இல்லை என்றார் அவர்.

மறக்க முடியா பாடகர் முஹம்மத் ரஃபி, நௌஷாத் அலியுடன்.



பழைய ஆசாமிகளுக்கே இவரை நன்கு தெரியும்,என்றாலும் நான் பழைய ஆசாமி அல்ல.
நன்றி:- தினமணி ஈகைப்பெருநாள் மலர்.
சினிமா உலகிற்குச் செல்பவர்கள் ஒழுக்கமாக இருப்பது கடினம் என்ற கருத்தைப்
பொய்யாக்கியவர் முஹம்மத் ரஃபி.


பஞ்சாப் மாநிலம் கோட்லா சுல்தான்பூருல் 1924-ல் பிறந்தார். பள்ளிக்கூட நிழல்
கூட இவர் மீது படவில்லை. ஆனால், தொமுகை, குர்ஆன் உள்ளிட்ட மார்க்கக் கல்வியைத்
தமது எட்டு வயதில் முழுமையாகக் கற்றார்.


சிறு வயதில் தந்தையுடன் மசூதிக்குச் செல்லும் போது மசூதி அருகில் மார்க்கம்
தொடர்பான பாடல்களைப் பாடும் முதியவரை ரஃபி தினமும் சந்திப்பார்.


முதியவரின் பாடலை வீட்டுக்கு வந்து ரஃபி முணுமுணுப்பார். ரஃபியின் குரலுக்கு
வீட்டுக்குள் கிடைத்த வரவேற்பும் பாராட்டும் அவருக்குள் பின்னணிப் பாடகராகும்
ஆசையைத் தூண்டின. ஆனால் தந்தை முஹம்மத் அலீம், தாய் அல்லா ரக்காஹ் இதற்குச்
சம்மதிக்கவில்லை. இதற்கிடையே தமது சகோதரர் ஹாமீதின் உதவியுடன் மும்பைக்கு
வந்தார். திரைப்பட வாய்ப்பைத் தேடிப் பல்வேறு இசையமைப்பாளர்களைச் சலிக்காமல்
சந்தித்தார்.


ஒரு பஞ்சாபிப் படம்தான் அவருக்குப் பின்னணிப் பாடகர் என்ற அடையாளத்தைத் தந்தது.
இதையடுத்து பல்வேறு ஹிந்திப் படங்களில் பாடத் தொடங்கினார்.


மேலா, ஆன், தீதார், பைஜு பாவரா, தோஸ்தி, தோஸ்த், தோ ராஸ்தே, கீத், ஷாகிருத்,
மேரே மெஹபூப் உள்ளிட்ட படங்கள் அவரது புகமுக்கு மகுடம் சூட்டின.


“ஓ துனியா கே ரக்வாலே’ (படம்: பைஜு பாவரா), “யா ஹு’ (ஜங்லி), “கைசெ ஜீதே ஹைன்
பஹ்லா’ (தோஸ்த்), “சாஹுவ்கா துஜேஹ்’ (தோஸ்தி), மேரே மித்வா (கீத்) எனத்
தொடங்கும் பாடல்களை மென்மையான குரலால் பாடி இசைப் பித்தர்களைத் தம் பக்கம்
வளைத்துக் கொண்டவர் ரஃபி.


திரைப்படத் துறையில் இருந்தும் ஐந்து வேளைத் தொமுகையாளியாகத் திகழ்ந்ததுதான்
முஹம்மத் ரஃபி மீது இன்றும் கூட முஸ்லிம்கள் மதிப்பும் மரியாதையும்
வைத்திருக்கக் காரணம்
. திரைப்படத்துறையில் இருந்தும் திரைப்படங்கள் பார்க்காத
ஒரே கலைஞர் முஹம்மத் ரஃபி. தாம் பாடிய பாடல்களுக்கான காட்சிகளையும் அவர்
பார்த்ததில்லை என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.



1972-ல் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார். அந்த ஹஜ் முடிந்ததும் இந்தியாவுக்குத்
திரும்பாமல் மெக்காவிலேயே ஓராண்டு தங்கியிருந்து அடுத்த ஹஜ்ஜையும்
நிறைவேற்றினார்.


தாம் வசிக்கும் மும்பை பாந்த்ரா பகுதியில் மசூதி ஒன்றைக் கட்ட வேண்டும் என தனது
கடைசி காலத்தில் விருப்பப்பட்டார். 1980 ஜூலை 31-ம் தேதி அவர் காலமானார். பின்
அவரது மகன்கள் பாந்த்ராவில் மசூதியைக் கட்டினர்.


அவரது இரண்டு மகள்கள், 5 மகன்களையும் திரைப்படத் துறையின் நிழல் கூட படாதவாறு
வளர்த்தார். அவரது மனைவி பல்ஃகஸ் பேகமும் ரஃபியின் நற்செயல்களுக்கு உற்ற
துணையாக இருந்தார்.
ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப்
பாடியுள்ள ரஃபி, பிலிம்பேர் உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


இஸ்லாமிய நெறிமுறைகளின்படி வாழ்ந்த முஹம்மத் ரஃபி, திரைப்படத்துறையில் உள்ள பிற
முஸ்லிம் கலைஞர்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி.


நன்றி : தினமணி ஈகைப் பெருநாள் மலர்

மாத்துனா சாத்துதான்

நன்றி தினத்தந்தி MARCH 16 2010

காலநிலை மாற்றத்தால்
இந்தியாவில் உணவு&தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
கருத்தரங்கில் தகவல்


கோவை,மார்ச்.16&
காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு&தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கருத்தரங்கம்
கோவை பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் மற்றும் வாழ்வியல் அறிவியல் துறை சார்பில் Ôகாலநிலை மாற்றத்தால் பூச்சி இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புÕ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் சசிகலா வரவேற்றார். பதிவாளர் திருமால்வளவன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக வனமரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவன இயக்குனர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:&
நம் நாட்டில் 400&க்கும் மேற்பட்ட சிறு செடியினங்களும், 57 ஆயிரம் வவையான பூச்சி இனங்களும் உள்ளன. இவை மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. காலநிலை மாற்றம் காரணமாக அரியவகை பூச்சி இனங்களும், தாவர இனங்களும் அழிந்து வருகின்றன.
மக்கள் தொகை பெருக்கம்
வண்ணத்து பூச்சி இனங்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டன. இதில் பெரும்பாலான இனங்கள் அழிந்து விட்டன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தாவரங்கள் மற்றும் மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டியது அவசியம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பூச்சி இனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செடிகளில் உள்ள பூக்களின் மகரந்த துகள்களை ஒரு தாவரத்தில் இருந்து மற்றொரு தாவரத்துக்கு கொண்டு செல்லும் பணியை பூச்சிகள் செய்து வருகின்றன. பூச்சி இனங்கள் குறைவதால், தாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில், மக்கள் தொகை பெருக்கமும் ஒரு பிரச்சினையாக உருவாகி வருகிறது.
மேலாண்மை முறைகள்
காலநிலை மாற்றத்தால் தாவரங்கள் மற்றும் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாலும், மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், சில ஆண்டுகளில் இந்தியாவில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கவும், அழிந்து வரும் தாவரம் மற்றும் பூச்சி இனங்களை பாதுகாக்கவும், ஒருங்கிணைந்த தாவர மற்றும் பூச்சி மேலாண்மை முறைகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கிருஷ்ணகுமார் கூறினார்.
கருத்தரங்கில், பேராசிரியர் முருகன், இயக்குனர் மணியன், Ôவேம்பில் இந்தியாவின் பசுமைÕ திட்ட இயக்குனர் பெரின் எஸ்.பிட்டர் அமெரிக்கா செயின்ட் ஒலாப் கல்லூரி பேராசிரியர்கள் ஆன் வால்டர் மற்றும் மைக்கேல் ஸ்விப்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

உரக்க கத்தினால் தான் ஒருநாளாவது கேட்கும்

நன்றி; தினமணி தலையங்கம்:-
16 Mar 2010 03:55:08 AM IST
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...
உலகில் பருத்தி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பருத்தி ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கு 2-வது இடம். ஆண்டுக்கு 240 லட்சம் பேல்கள் பருத்தி (ஒரு பேல் என்பது 170 கிலோ பருத்திப் பொதி) இந்தியாவில் உற்பத்தியாகிறது. 90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. பருத்தியை நம்பி 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் வாழ்கின்றன.
ஆனால், பருத்தி விவசாயிகளுடன்தான் விளையாடுகிறது மான்சாண்டோ நிறுவனம். இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
மான்சாண்டோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு பி.டி. பருத்தி வகையை அறிமுகம் செய்தது. பல்வேறு நோய்களைத் தாங்கி வளரும் என்றும், இதில் மரபீனியிலேயே புழுக்களை அழிக்கும் மூலக்கூறுகள் இருப்பதால் புழுத்தாக்குதல் இருக்காது என்றும் சொல்லி விற்பனை செய்தது. பருத்தி, ஆடைக்குத்தானே பயன்படுகிறது; இதனால் மனிதருக்கு என்ன பாதிப்பு என்று மான்சாண்டோவுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. இருந்தாலும்கூட, இந்த பி.டி. பருத்தியில் கிடைக்கும் பருத்திப் பிண்ணாக்கை மட்டுமல்ல, பருத்தி இலையைத் தின்னும் ஆடுகள்கூட இறக்கின்றன. இந்த ஆடுகளின் பால் மனிதருக்குக் கேடு விளைவிக்கும் என்றெல்லாம் கூட இயற்கை விவசாயப் போராளிகள் குரல் கொடுத்து ஓய்ந்துபோனார்கள்.
இப்போது மான்சாண்டோ நிறுவனம் ரொம்ப நியாயஸ்தன் போல ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதாவது, "குஜராத்தில் நடத்திய கள ஆய்வுகளில், இளஞ்சிவப்பு புழுக்களை எதிர்த்து வளரும் சக்தியை பி.டி. பருத்தி விதைகள் இழந்துவிட்டன. இந்தப் புழுக்கள் தங்களுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டுவிட்டதால் இனிமேல் பி.டி. பருத்தியில் 2-வது ரகத்தை விவசாயிகள் வாங்குவதுதான் நல்லது' என்று யாரும் கேட்காமலேயே அறிக்கை வெளியிட்டுள்ளது.
மான்சாண்டோ இந்த அறிக்கையை நியாயஸ்தன் போல வெளியிட்டாலும் இதன் மூலம் இரண்டு விஷயங்கள் அம்பலப்பட்டு இருக்கின்றன. ஒன்று, புழு, பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் என்பது வெறும் பொய்தான். இரண்டாவது, இது ஒரு வியாபார உத்தி. காப்புரிமை பெற்ற பி.டி. விதைகளுக்குக் குறிப்பிட்ட காலம்வரைதான் உரிமத்தொகையைக் காட்டி விலை நிர்ணயம் செய்ய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர், அந்த விதைக்கான உரிமத்தொகை பெறும் உரிமை காலாவதியாகிவிடும். ஆகவே, தற்போது புதிய ரகம் என்ற பெயரில் பி.டி.பருத்தியின் இரண்டாவது ரகத்தை மான்சாண்டோ அறிமுகம் செய்கிறது. முதல் ரகம் தகுதியற்றது என்று சொல்வதன் மூலம் விவசாயிகள் அனைவரும் இரண்டாவது ரகத்துக்கு மாறியே ஆக வேண்டும்.
இந்த உத்தி இந்தியாவுக்குப் புதிது. அமெரிக்காவுக்குப் பழையது. உலகில் 90 சதவீத உயிரி-தொழில்நுட்பப் பயிர்களைக் கையாளும் மான்சாண்டோ, அமெரிக்காவில் அறிமுகம் செய்த மரபீனி மாற்றப்பட்ட சோயாபீன் விதைகளுக்கான உரிமத்தொகை பெறும் உரிமை 2014-ல் முடிகிறது. ஆகவே, அங்கேயும் புதிதாகக் காப்புரிமை பெற்றுள்ள இரண்டாம் வகை சோயாபீன் விதைகளைப் பயன்படுத்த விவசாயிகளைத் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறது மான்சாண்டோ.
மத்திய பருத்தி ஆய்வுக் கழகத்துக்கு இதுபற்றி தாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரிவித்துவிட்டதாக மான்சாண்டோ நிறுவனத்தின் இந்திய இயக்குநர் கூறியபோதிலும், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு இதுவரை தகவல் தெரியாது என்பது ஆச்சரியமான ஒன்று. இத்தகைய பி.டி. ரக விதைகளுக்கு அனுமதி அளிப்பதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான். ஆனால் அவர்களுக்கு மான்சாண்டோ அறிக்கை வெளியிட்டு, பத்திரிகையில் வெளியான பிறகுதான் தகவல் தெரியும் என்றால், நம்ப முடிகிறதா!
வியாபாரத்துக்காக மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்குள் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்தவொரு பி.டி. ரக பயிருக்கும் அனுமதி பெறலாம், திடீரென்று இந்த விதை சரியில்லை; ஆகவே எங்களுடைய அடுத்த தயாரிப்பு விதைகளை வாங்கு என்று சொல்லலாம், விலையை தானே நிர்ணயிக்கலாம் அல்லது தான் விரும்புகிற விலையை நிர்ணயிக்கும்படி மத்திய அரசை வளைக்கலாம்...ஆனால் விவசாயிகள்? தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
பருத்தி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாம் நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணமோ பொறுப்போ இல்லாமல் மத்திய அரசு இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை இந்திய விவசாயிகளிடம் நெருங்கவிடுகிறது. 40 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை நாம் மேற்கொள்ளும் முடிவுகளில்தான் இருக்கிறது என்ற பச்சாதாபம்கூட அரசிடம் இல்லை. மான்சாண்டோ போன்ற நிறுவனங்களின் வியாபாரத்தை தடுத்து நிறுத்தவும் தெம்பில்லை.
இதே நிலைமைதான் பி.டி கத்தரியிலும் ஏற்படும் என்பது நிச்சயம். இப்போது பி.டி மக்காச்சோளத்தை நமது வேளாண் பல்கலைக்கழகத்தில் கள ஆய்வு நடத்தி உற்பத்தி செய்து வருகிறார்கள். இன்னும் 40 உணவுப் பயிர்களுக்கு ஆய்வுகள் நடக்கின்றன.
ஒரு விவசாயி, கிராமப்புறச் சூழலில் கிடைக்கும் காட்டுத்தழை, வீட்டுக்குப்பை, ஆடு மாடுகளின் சாணம் என்று வயலில் போட்டு, தனது மாடுகளைக் கட்டி உழுது, அறுவடை செய்து, அடுத்த சாகுபடிக்கு விதைநெல் எடுத்து வைத்து, மற்றதை விற்றுப் பணம் பார்த்து.... அந்த அமைதியான வாழ்க்கையை விரட்டுகின்றன மான்சாண்டோ நிறுவனங்கள். அதற்குத் துணை போகிறது அரசு.
இன்றைய விவசாயி ரசாயன உரத்துக்காகச் செலவிட வேண்டும். ரசாயன உரம் விற்போர் கொழிப்பார்கள். டிராக்டரையும், அறுவடை இயந்திரங்களையும் நம்பியே வாழவேண்டும். இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் கொழிப்பார்கள். விதைகளுக்கும் மான்சாண்டோவைப் போன்ற நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டும். இத்தனையையும் மீறி, மழை பெய்து, விளைந்தால், அதற்கும் நியாயமான விலை கிடைக்காது. விவசாயத்தை அழிப்பதற்கு இதைவிட நல்ல உத்தி இருக்க முடியுமா! இதையெல்லாம் மீறி இந்தியாவில் விவசாயம் நடக்கிறதென்றால், மண்ணை நேசிக்கும் விவசாயிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைத்தவிர வேறென்ன!
விவசாயிகள், குறிப்பாக தமிழக விவசாயிகள், தற்சார்பு தன்மைகொண்ட பாரம்பரிய விவசாயத்துக்கு மாறுவதைத் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மைக் கொள்கையை தமிழக அரசு அறிவித்து, விவசாயிகளுக்கு புதிய பாதையைக் காட்ட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் தீரும் பொருளே அன்றி உற்பத்தியாகும் பொருளல்ல.

உலகில் 2050-ல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்
நன்றி:- தினமணி.

First Published : 13 Mar 2010 06:58:51 AM IST

Last Updated : 13 Mar 2010 10:54:17 AM IST
(ஆயிரம் கார்களில் பவனிவரும் அரசியல் அணிவகுப்புகளும்,தலைவர்களின் பலத்தை நிரூபிக்க,தஞ்சை தள்ளாடட்டும், திண்டுக்கல் திண்டாடட்டும், மதுரையில் மன்றாடட்டும், என்றெல்லாம் போனால்?திண்டாட்டம்தான்,சேமிப்பு என்பது,பணத்தில் மட்டுமல்ல,நம் எரிபொருளிலும்தான்,எருபொருளிலும்தான்.

ஐயா கிருஸ்து தாஸ் நீங்கள் கூறியது தோராய கணக்குதான்,இருக்கும் மக்கள் தொகையில் கட்டுப்பாடு இன்றி விரயம் செய்தால் 2050 அல்ல 2030க்குள் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
*************************************************************


ஒசூர்,​​ மார்ச்​ 12: உல​கம் முழு​வ​தும் 2050-ம் ஆண்டில் பெட்ரோல்,​​ டீசல்,​​ நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை முதன்மை செயலாளர் ஆர்.கிருஸ்துதாஸ் காந்தி கூறினார்.​ ​

​ ​ ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் அவர் பேசியது:

​ நம் கண் முன்னே இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.​ 2050-ல் பெட்ரோல் டீசல்,​​ நிலக்கரி ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு வரும்.​ ​

இவற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கும்போது காற்று மாசுபடுகிறது.​ ஆனால் ​ நீர்,காற்று,​​ சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது எத்தகைய பாதிப்பும் இயற்கைக்கு ஏற்படுவதில்லை.

மேற்கு ஜெர்மெனியில் மொத்த மின்உற்பத்தியில் 8 சதவீதம் காற்று மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.​ ஆனால் தமிழகத்தில் மொத்த மின் உற்பத்தியில் 30 சதவிகிதம் காற்று மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.​ உலகில் வேறு எங்கும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை.

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் சூரியஒளி மூலம் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்க முடியும்.​ ஆண்டுக்கு 300 நாள்கள் சூரியஒளியை நாம் முழுமையாக பெறுவதே இதற்கு காரணம்.​ ஆனால் சூரியஒளி மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ.15 கோடி முதலீடு தேவைப்படுகிறது.

போட்டோசெல் மூலம் சூரியக் கதிர்களை மின்சாரமாக மாற்றும் முறை தற்போது உள்ளது.​ இந்த போட்டோ செல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் நமக்கு அதிக செலவாகிறது.

​ ​ எனவே இவற்றை இந்தியாவில் உற்பத்தி செய்ய மாணவர்கள் புதிய உத்திகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

​ ​ ​ ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத்,​​ பேராசிரியர்கள் அறிவுடைநம்பி,​​ ஷியாம்சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நமக்கு தெரியாமல் இன்னும் என்னன்னவோ?

நன்றி தினமணி தலையங்கம் 09/03/2010

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.


இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?


அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.


இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?


இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.


இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.


சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.


இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?


சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.


இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

நன்றி தினமணி தலையங்கம் 09/03/2010

நல்லாதான் இருக்கு ஆனாலும் எவன் கேட்பான்?

வீழ்ந்து கிடக்கும் வேளாண்மை

ப. குணசேகரன் DINAMANI FRIDAY FEB 2010 நன்றி தினமணி:-


உணவுக்கு உத்தரவாத மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த இருப்பது வரவேற்க வேண்டிய ஒரு செய்தி. அதேசமயம் அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரமான விவசாயத்துக்கும் எந்த உத்தரவாதமும் இல்லாமல் தொடர்கின்ற நிலை வேதனைக்குரியது.


அமெரிக்காவின் பிரெய்ரி பகுதியிலும், ரஷியாவின் ஸ்டெப்பி பகுதியிலும் கோதுமை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும், தென் அமெரிக்காவில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கும், ஐரோப்பிய நாடுகளில் பழத்தோட்டம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், தென் கிழக்காசிய நாடுகளில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கும் ஒரு சராசரி இந்திய விவசாயி எதிர்கொள்ளும் பிரச்னை எதுவும் கிடையாது.


இந்திய விவசாயத்துக்கு ஆதாரமான பருவமழைதான் விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்னை என்பதை மறுப்பதற்கில்லை. பருவக்காற்று முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ வீசினாலும் அல்லது பொய்த்துப் போனாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டும்தான். மேலும், இவற்றின் எதிர்மறை விளைவான வெள்ளம், வறட்சி ஆகியவற்றினாலும் விவசாயிகள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.


பருவ மழையின் பாதகங்களை நிலத்தடி நீராதாரத்தைக் கொண்டுதான் நமது விவசாயிகள் சமாளித்து வருகின்றனர். அதற்கும் பெரும் சோதனையாக மின்வெட்டு உருவெடுத்துள்ளது. தொழிற்சாலைகளுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 22 மணி நேரம் வரை மின்சாரம் வழங்குகின்ற அரசு, விவசாயத்துக்குத் தொடர்ச்சியாகப் பத்து மணி நேரம்கூட மின்சாரம் அளிக்க மறுப்பதால் வேளாண் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் மொத்தப் பாசனப் பரப்பில் 44 விழுக்காடு நிலங்கள் கிணற்றுப் பாசனத்தை நம்பியே உள்ளன. 90 விழுக்காடு காய்கனிகள் கிணற்றுப்பாசன நிலங்களிலிருந்துதான் விளைவிக்கப்படுகின்றன. விவசாயத்துக்கான மின்வெட்டின் காரணமாக விளைபொருள் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இப்போதைய விலைவாசி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.


பசுமைப் புரட்சியின் சாதனைகளில் முக்கியமானது இந்திய விவசாயிகளை ரசாயன உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்கும் பழக்கப்படுத்தி அடிமைகளாக்கியதாகும். ரசாயன உரங்கள் மண்வளத்தையும் நுண்ணுயிர் பெருக்கத்தையும் அழித்ததோடல்லாமல் மறைமுகமாகக் கால்நடை வளர்ப்பையும் வெகுவாகக் குறைத்துவிட்டது. கால்நடை வளர்ப்பு என்பது பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்காக மட்டுமன்றி இயற்கை உரமான சாண எரு உற்பத்திக்காகவும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இயற்கை உரத்தையும் இரட்டிப்பு வருமானத்தையும் வழங்கிய கால்நடைகளின் இடத்தை ரசாயன உரப் பயன்பாடு ஆக்கிரமித்து அழித்து விட்டது. இதனால் பால் உற்பத்தியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பால் விலை லிட்டருக்கு ரூபாய் நாற்பதை நெருங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.


விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தாம் வழங்குகின்ற கடன் தொகையில் 40 விழுக்காடு வரை ரசாயன உரமாக வலிந்து திணிக்கும் போக்கு தொடர்கிறது. இதன் காரணமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகின்ற ஒரு சிலரும் ரசாயன உரப் பயன்பாட்டிலிருந்து விடுபட இயலாத சூழ்நிலை நிலவுகிறது.


உர நிறுவனங்களுக்கு கோடிகோடியாய் கொட்டிக் கொடுக்கப்படும் மானியத் தொகை விவசாயிகளின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் இன்றுவரை தொடரும் யதார்த்த நிலை. உழுதுண்டு வாழ்ந்தவரை கடனில் உழல வைத்ததில் ரசாயன உரத்தின் பங்கே அதிகம்.


இடுபொருள் செலவே இல்லாத பாரம்பரியமான நமது இயற்கை விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்கும் வேளாண் பல்கலைக்கழகங்களுக்கும் உள்ளது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு கேட்டு வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என்பதே ஒரு பெயரளவுக்கான திட்டமாகத்தான் இருக்கிறது. பயிர்க்காப்பீட்டு நடைமுறை விதிகள் ஒரு சாதாரண எளிய விவசாயி அணுகக்கூடிய வகையில் அமையவில்லை என்பதுதான் உண்மை நிலை.


பல்வேறு சிரமங்களுக்கிடையே விளைவிக்கப்படும் விளைபொருளுக்குப் போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து விவசாயிகள் நஷ்டத்தையே எதிர்கொள்கின்றனர். இடைத்தரகர்களாலும் வியாபாரிகளாலும் விவசாயிகள் சுரண்டப்படும் நிலை தொடர்கிறது. பல மாவட்டங்களில் நியாயவிலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் முடங்கிப் போயுள்ளன. இவை மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஓராண்டில் பல மாதங்கள் மூடிக்கிடக்கிற சட்டப்பேரவைக்குப் புதிய கட்டடம் கட்டுகிற அரசு, மாவட்டந்தோறும் காய்கனிகளை நீண்ட நாள்களுக்குப் பாதுகாத்து வைக்க உதவும் குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க முன்வர வேண்டும். இதன்மூலம் விவசாயிகளும் பொதுமக்களும் பயன்பெறுவதோடு வியாபாரிகளின் சுரண்டலையும் விலை வீழ்ச்சியையும் தடுக்க முடியும்.


மக்கள்தொகை வேகமாகப் பெருகி வருகிற வேளையில் விளைநிலங்களின் பரப்பளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வருவது, உணவு உற்பத்தியில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். நாடு முழுவதும் விளைநிலங்களை வரையறுத்து அவற்றைத் தொழில் துறை மற்றும் பிறதுறை பயன்பாட்டுக்காக ஆக்கிரமித்தலைத் தடுக்கச் சட்டம் இயற்ற வேண்டும். இல்லாவிட்டால், சட்டத்தில் மட்டும் உணவுக்கு உத்தரவாதம் அளித்துவிட்டு நடைமுறையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க முடியாத நிலை தொடரும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.


அன்னிய முதலீடு இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக எவ்வளவு சலுகைகள் அளிக்க முடியுமோ அவ்வளவு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. வேளாண் துறையிலும் அன்னிய முதலீட்டைக் கொண்டுவர குறுக்கு வழி ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலம். அயல்நாட்டு நிறுவனங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வேளாண் உற்பத்தியில் ஈடுபட எவ்விதத் தடையுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


விவசாய நிலங்களை வளைத்துப் போட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுவதன் உள்நோக்கமும் அதுவாகத்தான் இருக்க முடியும். இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பரிசோதனைச் சாலைகளாக மாறப்போகும் ஆபத்தும் நம்மை எதிர்நோக்கியே உள்ளது.


வளர்ச்சியின் பலன்களைப் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கும் சென்றடையச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். கடந்த ஐந்தாண்டுகளில் கிராமப்புற விவசாயிகளுக்கு எந்த மாதிரியான பலன்கள் சென்றடைந்துள்ளன என்பதற்கு பிரதமர்தான் விளக்கமளிக்க வேண்டும்.


மத்திய அரசு கூறி வருகின்ற வளர்ச்சியின் விளைவாக கிராமப்புற விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடும், மின்சாரத் தட்டுப்பாடும், விவசாயக் கூலியாள்கள் கிடைக்காமையும்தான் அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் வேலைவாய்ப்பிலும் விவசாயத்தின் பங்களிப்பு ஆண்டுக்காண்டு கணிசமாகக் குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.


நேற்றுவரை நதிநீருக்காக, பருவமழைக்காக, உரத்துக்காக, இலவச மின்சாரத்துக்காக, பயிர்க்கடனுக்காக, பயிர்க்காப்பீட்டின் இழப்பீட்டுக்காகக் காத்துக் கிடந்த நமது விவசாயிகள், இனி விதைக்காகவும் காத்துக் கிடக்கிற அவலநிலை மரபணு மாற்று விதை நிறுவனங்களால் உருவாகப் போகிறது.


பி.டி.பருத்தியால் விவசாயிகளின் தற்கொலை குறையவில்லை என்ற உண்மையை பி.டி. ரகப் பயிர்களை அனுமதிப்பதற்கு முன்னர் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்திய வேளாண் தொழில்நுட்பச் சந்தையில் நுழையும்போது அறியாமையிலும் ஏழ்மை நிலையிலும் உள்ள நமது விவசாயிகள் எளிதில் வீழ்த்தப்படுவார்கள்.

தனியார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் விதைகளைப் பரிந்துரை செய்யும் வழக்கத்தை நமது வேளாண் பல்கலைக்கழகங்களும் அதன் விஞ்ஞானிகளும் கைவிட வேண்டும்.


இந்திய விவசாயத்தைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்கள் வகுத்தளிக்கும் அறிவியல் நுட்பங்களைக் காட்டிலும் விவசாயிகளின் பாரம்பரியமும் பட்டறிவும்தான் சாகுபடி நுட்பங்களைத் தீர்மானிக்கின்றன. இதனைப் பல்கலைக்கழகங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.


மேலும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாத, இடுபொருள் செலவற்ற புதிய சாகுபடி நுட்பங்களை ஆராய்ச்சி செய்யவும், அறிமுகம் செய்யவும் முன்வர வேண்டும்.


வேளாண்மை என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை. அதனால்தான் வள்ளுவர் "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்றார். வேளாண்மை என்பதே பிறர்க்கு உணவளிக்கும் பெருஞ்சேவை. இத்தகைய பெரிய சேவை புரியும் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான உதவிகளும் உரிய மதிப்பும் வழங்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நமது உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

DINAMANI FRIDAY FEB 2010 நன்றி தினமணி:-

மாநபிகளின் மீலாதும் , சீர்மிகு சீரத்தும் :-



நபிகள் நாயகத்தின் பிறந்த தின வரலாற்றை எடுத்து கூறும் நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளி நடை பெற்றுவருகின்றன.
குறிப்பாக இப்படி நிகழ்வுகள் கூடுமா கூடாதா? என்பன கேள்விகளுக்கிடையே அது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் வெகுவேகமாகவும் வியாபித்தும் நடைபெற்று வருகிறது.

நபிகள்நாயகம் அவர்கள் உலகமாந்தர்களிடையே ஒரு ஒப்பற்ற நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள், என்பதை அவர்களின் எதிரிகளேகூட ஒப்புக்கொண்ட உண்மை.
மிக முன்னேறிய- நாகரீக- அறிவுசார்ந்த-தொலைநோக்கு பார்வை கொண்ட-மனித உரிமையின் பாற்பட்ட மாபெரும் அமைப்புக்களும், அரசாங்கங்களும்,அவைகளின் கூட்டுக்கலவையான ஐக்கியநாட்டு சமூகமும், தற்போது மேற்கொண்டுவரும் அனைத்து மனிதகுல நலத்திட்டங்களும் நல்வழிகாட்டுதல்களும் அவற்றில் பெரும்பாலானது, அண்ணலார் அன்றுரைத்த அறவுரை,அறிவுரைகளிலிருந்துதான் என்றால் மிகையில்லை.
இதை அண்ணலாரின் அமுதுரைகளை ஒருமுறை படித்துவிட்டு,பின், தாங்கள் இப்போது மனிதகுலத்திற்காக கடைபிடித்துவரும் திட்டங்களையும் ஒரு ஒப்பீட்டு கண்ணோடு பார்த்தால் தெளிவான சான்றுகள் கிடைக்கும்.

வியர்வை காயுமுன் கூலியை கொடு, சுமைக்கேற்றவாறு தூக்கவிடு, வேலைக்குமுன் கூலியை நிர்ணயம்செய்,என்பன வற்றில் தொழிலாளர் சட்டம் மிளிர்கிறது,
கொள்ளை,பதுக்கல்,உணவு கலப்படம்,உள்நாட்டில் தேவையிருக்க ஏற்றுமதி செய்தல்,பொருட்களின் விலைநிர்ணயம்,பெண்கள் பாதுக்காப்பு முறை,குழந்தைகள் நலம்,சிறுவரை வேலையில் ஈடுபடுத்தாமை,
கட்டாய கல்வி,
இளைஞர் நலம்,
மது,போதைப்பொருள் ஒழிப்பு,
சிறைக்கைதிகள் சீர்திருத்தம்
விபச்சார தடுப்பு
திருமண அவசியம்,
முதியவர்களை காப்பது,
ஏழை எளியவர்க்கு இலவச மருத்துவம்,
இயலாதவர்க்கு உதவி
நலிந்தோர்க்கு வட்டியில்லா கடன் உதவி
திருப்பி செலுத்தவியலாதவர்க்கு கடன் தள்ளுபடி
ஊகபேரத்தடை,
விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, என மிக நீண்டு வரும்,தற்கால அத்தனை பிரச்சனைகளுக்கும், அண்ணலாரின் அமுத மொழிகளில் ஆதாரம் உள்ளதென்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்.
நவீனகாலத்து பிரச்சனைகள் இந்த முஹமது நபியவர்களுக்கு எப்படி தோன்றியது என்று நம்மில் பலருக்கு இன்னும் ஆச்சரியம் கூடலாம்.
ஆனால் வியப்பில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் தூதராக இருந்துதான் இக்காரியத்தை செய்தார்கள்,அதனால்தான் பதினைந்து நூற்றாண்டாகியும் அவர்களின் புகழ் மேலோங்கி வருகிறது.

பெயரிலேயே பேர் பெற்ற “புகழப்பெற்றவர்” எனும் பெயர் கொண்டவர்,
உலகம் உள்ளளவும் மனிதகுலம் இன்பம் துய்க்க அவரின் சமாதான வழி, இருகரம் நீட்டி வரவேற்ற வண்ணமாய்
திறந்தே இருக்கிறது.
வாருங்கள் வந்து சுவை காணுங்கள், என்று அவர்தம் வழிநடந்தோர் அழைத்த வண்ணமும் உள்ளனர்.
அன்னியரிடமிருந்து தேசத்தை மீட்டெடுக்க காந்தியடிகள் காட்டிய அஹிம்சாவை, அன்றைய அரபுக்களிடமும் 13 வருடங்களுக்கும் மேலாக
காட்டி, சமூகநீதிக்கும்,சமூகவிடுதலைக்கும் வித்திட்டவர்கள்.
இத்தனை மாற்றங்கள் பெற்றுத்தந்த அண்ணலார் நபிகள் நாயகம்
முஹம்மத் [ஸல்] நபியவர்களின் சரித்திரம், நினைவூட்டல் வழியாக கிடைப்பதாலேயே நாமும் அதை நினைவூட்டிவருகிறோம், என்பதை நினவில் கொண்டால்,
நினைவூட்டல் அவசியம் தானே? ஆம் சீரதுன்நபி ஒரு நினைவூட்டலே.
நபியே உம்மை நினைவு கூர்வதை நாமே மேலேங்க ச்செய்வோம் [அல்குர்ஆன்:94:4]

வாழச் சொலும் வாசகங்கள்
-தமிழருவி மணியன்

ஒரு ஜென் துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக் கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது.


நடந்த துறவி நின்றார். சீடர்களைத் திரும்பிப் பார்த்தார். ‘சீடர்களே! முயலும், அதைப் பின் தொடர்ந்து நரியும் ஓடுவதைப் பார்த்தீர்களா? முயலை நரி பிடித்துவிடுமா?என்று கேட்டார்.

குருவே! முயல் வேகமாக ஓடும் என்பது உண்மைதான். ஆனால், நரி முயலை விட வேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றது. அதனால் நிச்சயம் இந்த நரி அந்த முயலைப் பிடித்துவிடும். இதில் கேள்விக்கு இடமேது?’ என்று சிரித்துச் சீடர்கள் தங்கள் அறிவின் ஆழத்தை வெளிப்படுத்தினர்..

சீடர்கள் சிரித்ததைப் பார்த்துக் குருவும் வாய்விட்டுச் சிரித்தார். ‘கேள்விக்கு இதில் இடமிருப்பதை உணர்ந்ததனால்தான் நான் உங்களுக்குக் குருவாக இருக்கிறேன். சிந்திக்க இதில் இடமில்லை என்று நினைப்பதனால்தான் இன்னமும் நீங்கள் சீடர்களாகவே இருக்கிறீர்கள்’ என்றார் குரு.கேள்விக்கும், சிந்தனைக்கும் இதில் எங்கே இடம்?’ என்று சீடர்கள் மீண்டும் ஒரே குரலில் கேட்டனர். ‘கேள்விகளால் நடத்தும் வேள்விகளால்தான் உலகத்தின் உண்மைகள் ஒவ்வொன்றும் புலப்படும். என் கேள்விகளுக்கு முதலில் நீங்கள் பதில் சொல்ல முயலுங்கள் என்ற துறவி ‘முயலும், நரியும் ஏன் ஓடுகின்றன? என்று கேள்விக் கணையைத் தொடுத்தார்..

நரியிடமிருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல் ஓடுகிறது. அந்த முயலைக் கவ்விப் பிடித்து உணவாக்கிக் கொள்ள நரி ஓடுகிறது என்று சீடர்கள் தெளிவாகப் பதில் தந்தனர்.உயிர் முக்கியமா? உணவு முக்கியமா? என்று அடுத்த கணையை வீசினார் குரு. ‘இது என்ன கேள்வி? இன்றில்லாமற் போனால் உணவை நாளை நாம பெறக்கூடும். ஆனால், இருக்கும் உயிரை இழந்துவிட்டால் திரும்பவும் அதை நாம் பெற முடியாதே! இழந்தால் பெறக்கூடிய உணவை விடவும், திரும்பப் பெறமுடியாத உயிர்தான் உலகத்தின் உயிரினங்கள் அனைத்துக்கும் முக்கியம்’ என்று ஒருவன் சொல்ல, மற்றவர் அனைவரும் அதை அழுத்தமாக அமோதித்தனர்..

சீடர்களே! இப்போது சிந்தியுங்கள். இழந்தால் பெறமுடியாத உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உந்துதலுடன் முயல் ஓடுகிறது. பசிக்கு இரை தேடும் உந்துதலுடன் நரி ஓடுகிறது. உணவின் உந்துதலைவிட உயிரின் உந்துதல் பெரிதல்லவா! அதனால் அதிகபட்ச உந்துதலுடன் ஓடிக் கொண்டிருக்கும் முயலை நரியால் பிடிக்க முடியாது’ என்றார் குரு..

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே முயல் ஒரு புதருக்குள் மறைந்து விட்டது. நரி எங்கே முயல் மறைந்தது என்றறியாமல் ஏமாற்றத்துடன் அங்குமிங்கும் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது.உந்துதலின் அளவுதான் ஒவ்வொரு மனிதனின் உயரத்தின் அடித்தளம். இதை உணர்த்துவதுதான் இந்த ஜென் கதையின் நோக்கம்..

உந்துதல் இல்லாத மனிதவாழ்வில் சானைகளுமில்லை: சரித்திரமுமில்லை.முதல் உலகப் போரில் ஜெர்மானியப் படையில் இலட்சக்கணக்கான வீரர்களுள் ஒரு வீரனாய் துப்பாக்கி தூக்கிய இட்லர்தான் இரண்டாம் உலகப் போர் உருவாவதற்கே காரணமானான். பிரெஞ்சுப் படையில் ஒரு சாதாரண சோல்ஜராய் இராணுவ வாழ்க்கையைத் தொடங்கிய நெப்போலியன்தான் இங்கிலாந்தை அச்சத்தால் அலைக்கழித்த பிரெஞ்சுப் பேரரசின் சர்வாதிகாரியாய் சரித்திரம் படைத்தான்.ஆஸ்திரியாவைச் சேர்ந்த இட்லர் ஜெர்மனியின் ஆட்சியாளனாய் மாறியதும், மத்தியதரைக் கடலில் உள்ள கார்சிகா தீவில் பிறந்த நெப்போலியன் பிரான்சின் அதிகார நாற்காலியில் அமர்ந்ததும் வரலாறு அதுவரை கண்டிராத அதிசயங்கள்..

இந்த அதிசயங்கள் அரங்கேறியதற்கு அவர்கள் உள்ளத்தில் உருவெடுத்த உந்துதல்தான் அடிப்படைக் காரணம்..

கிரேக்கத்தின் சின்னஞ் சிறிய மாசிடோனியா நகரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த அலெக்சாண்டரை உலகாளச் செய்தது எது? உலகப் படத்தில் குண்டூசிபோல் இருக்கும் ரோமை செல்வம் கொழிக்கும் பேரரசாக சீசரை உருவாக்கச் செய்தது எது? உந்துதல்!.

செருப்பு தைப்பவனுக்கு மகனாகப் பிறந்த அபிரஹாம் லிங்கனை அமெரிக்க வல்லரசின் முதல் மகனாய் உயர்த்தியதும், அந்த அமெரிக்காவே வியந்து பார்த்த ஆன்ம ஞானி விவேகானந்தராய் நரேந்திரனை உருவாக்கியதும் அவரவர் போக்கில் உருவெடுத்த உந்துதலே!.

ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற மனத்தின் முனைப்புதான் உந்துதல். ஒவ்வொருவர் வாழ்விலும் வெற்றிபெற சிந்தனைதான் முதலீடு; முனைப்புதான் வழிமுறை; கடும் உழைப்பே தீர்வு’ என்கிறார் அப்துல்கலாம்..

கனவு காணுங்கள். தீவிரமாகக் காணப்படும் கனவுகள் எண்ணங்களாக மாறி ஒருநாள் நிச்சயம் நனவாகும். உந்துதலோடு செயற்கடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு தேவை’ என்கிறார் கலாம்.வெற்றிக்கு வழி என்ன?’ என்ற தேடலிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடலாகாது. வெற்றி என்பது சிலருக்கு மட்டுமே ஆண்டவன் விசேஷமாய் வழங்கும் ஆசீர்வாதமில்லை..

வெற்றியைக் கரம்பற்ற நாம் மூன்று படிகளில் ஏறினால் போதும். அந்த மூன்று படிகள்… ‘ஆசைப்படு-ஆசைப்படுவதை அடையமுடியும் என்று நம்பு – அந்த நம்பிக்கை நிறைவேறும் வரை இடையறாது செயற்படு’. இதுதான் வெற்றிக்கான மூலமந்திரம். இந்த சூத்திரத்தின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால் போதும். வெற்றித் தேவதையின் கைகளில் இருக்கும் மாலை ஒரு நாள் உங்கள் கழுத்தை அலங்கரிக்கும்..

மதுக்கொடுமை அப்பப்பா



மது விற்பனை இருக்கும்வரை தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முடியாது:
தமிழருவி மணியன்:- தலைவர் காந்திய அரசியல் இயக்கம்,
*************************************************************************************

நாமக்கல்,​​ பிப்.​ 7:​ மது விற்பனை இருக்கும்வரை தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முடியாது என காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இயக்கத்தின் சார்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்த தேசிய சிந்தனைக் கருத்தரங்கில் அவர் பேசியது:

டாஸ்மாக் கடைகள் மூலம் பெறக்கூடிய வருமானத்தில் தமிழக அரசு பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.​ இலவச திட்டங்கள் வேண்டும் என தமிழக அரசிடம் பொதுமக்கள் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை.​ வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக கடந்த தேர்தலில் இலவச திட்டங்கள் குறித்த கவர்ச்சிகர அறிவிப்புகளை திமுக வெளியிட்டது.​ தற்போது,​​ இந்த திட்டங்களுக்காகவே தமிழக மக்களை குடிமகன்களாக மாற்றி வருகிறது.
இலவச வேட்டி,​​ சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கூறுகையில் தமிழகத்தில் மாற்று உடையில்லாமல் 3 கோடி மக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.​ இதற்காக ஆண்டுக்கு ரூ.​ 2,600 கோடி செலவில் இலவச வேட்டி,​​ சேலை வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.​ ஆனால்,​​ 2008-09-ம் ஆண்டில் டாஸ்மாக் கடைகளில் நடந்த மது விற்பனையில் மது மீது விதிக்கப்பட்ட உள்நாட்டு வரி மற்றும் விற்பனை வரி ஆகியவற்றின் மூலமாக மட்டும் ரூ.​ 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் வந்துள்ளது.​ மது மீதான வரி மூலமே 10 ஆயிரம் கோடி வருவாய் என்றால் இந்த தொகையை வைத்து மாற்று உடையில்லாமல் உள்ள 3 கோடி மக்களை வசதியாக வாழ வைக்க முடியும்.
இதை விடுத்து இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி,​​ ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி,​​ உயிர்காக்கும் காப்பீடு திட்டம் என்பதெல்லாம் மக்களை சிந்திக்க செய்யாமல் வைத்திருப்பதற்கே.​ ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கும் கிராம மக்கள்தான் தினமும் 70 ரூபாய் கொடுத்து டாஸ்மாக் மதுவை அருந்தும்நிலை உள்ளது.​ உயிர்காக்கும் காப்பீடு திóட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.​ 600 கோடி தனியார் நிறுவனத்துக்கு வழங்கினால் 5 ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி வழங்க வேண்டியுள்ளது.​ இந்த 3 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் 30 மாவட்டங்களிலும் தலா 100 கோடி செலவில் மருத்துமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அரசே துவக்க முடியும்.​ தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையும் ஓராண்டில் உணவு,​​ மருந்துக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிட்டால் மது குடிக்க செலவிடும் தொகையே அதிகமாக உள்ளது.​ இந்தநிலை மாற வேண்டும்.​ இலவச திட்டம் என்பது கல்விக்கு மட்டுமே இருக்க வேண்டும்.​ இலவச திட்டங்களால் மக்களை ஏமாற்றாமல் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் தமிழக மக்களை தயார்படுத்த வேண்டும்.​ பொதுநல அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும்,​​ கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும்.​ ​ மது விற்பனையால் வரும் வருமானம் பாவத்தின் சம்பளம் என்பதை உணர வேண்டும்.

100 ஊராட்சிகளுக்கு குறி:​ காந்திய அரசியல் இயக்கம் குறைந்தபட்சம் 100 ஊராட்சிகளில் இயக்க நிர்வாகிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளது.​ தமிழகத்தில் உள்ள 12,600 ஊராட்சிகளில் 100 ஊராட்சிகளிலாவது காந்திய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொறுப்புக்கு வந்தால் அந்த 100 ஊராட்சிகளை முன்மாதிரி ஊராட்சிகளாக மாற்றம் செய்து அவற்றை பிற ஊராட்சிகளும் கடைப்பிடிக்க செய்ய முடியும்.​ இதற்காக கிராமம் தோறும் சமூக அக்கறையுள்ள 10 இளைஞர்கள் இயக்கத்துக்கு முன்வர வேண்டும்.​ இந்த இளைஞர்களை கொண்டு கிராம சுயராஜ்ஜியம் அமைக்க பாடுபடுவதே காந்திய அரசியல் இயக்கத்தின் தலையாய நோக்கம்.​ இந்த இயக்கத்தில் வன்முறைக்கு இடமில்லை.​ முழுக்க,​​ முழுக்க காந்தியக் கொள்கைகள் பின்பற்றப்படும் என்றார் அவர்.
நன்றி: தினமணி பிப்/08/02/2010

உணவு பிணியா? நிவாரணியா?

நாம் உண்ணும் உணவு கட்டுப்பாடன்றி இருந்தால் அதுவே நமக்கு ஊறாக அமையும். இன்றைய உணவு நாளைய பிணி என்ற நிலை மாறி உண்ணும் உணவையே நமக்கு நிவாரணியாக மாற்றியைமைக்க சில வழிகாட்டுதல்கள்.

எவ்வளவு, எவ்வாறு உண்பது?

உணவு உண்பதில் பின்வரும் நடைமுறைகளைக் கவனிப்பது நலம் பயக்கும்

•உணவு உட்கொள்ளும் நேரம்
•உண்ணும் முறை
•உண்ணும் அளவு
•சமைக்கும் முறை
•உணவின் வகைகள்

உணவு உட்கொள்ளும் நேரம்

உணவை அதற்குரிய சரியான வேளைகளில் உட்கொள்ள வேண்டும். நேரம் தவறிய உணவு முறைகள் உடல் மற்றும் மன நலத்துக்கு ஊறு விளைவிக்கலாம். தங்கள் அலுவல் முறைகளைக் கருத்தில் கொண்டு உண்ணும் நேரத்தில் ஒரு ஒழுங்கு முறையைக் கடைபிடிக்க வேண்டும்

உண்ணும் முறை

உண்ணும் முறையில் தனிக் கவனம் வேண்டும். உணவு உண்பதில் அவசரம் காட்டக் கூடாது. நன்கு மென்ற பின்னரே விழுங்க வேண்டும். ஒரு நாளில் எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் தண்ணீர் அருந்த வேண்டும். உணவை அவசர அவசரமாக விழுங்குவதும் அதிகமாக உண்பதும் உடல் நலத்துக்கு ஊறு விளைவிப்பதாகும்.

உண்ணும் அளவு

ஒவ்வொருவரும் தனது வயது, உயரம், எடை, செயல்பாடுகள், வேலை, விளையாட்டு, கடின உழைப்பு, உடற்பயிற்சி முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தனக்கு தேவையான அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்ப உண்பதற்குப் பதில் ஒரளவுக்குப் போதும் என்பது வரை உண்பதே சிறந்தது. உணவில் தானிய வகைகளையும் காய்கறிகளையும் சோ்த்துக் கொள்வது நலம்.

சமையல் முறை

நாம் தோ்ந்தெடுக்கும் உணவுகள் எவ்வளவு சிறந்ததாக இருப்பினும் சமைக்கும் முறை நல்லதாக அமையாவிடில் அதுவே மோசமாகிவிடும். எனவே உணவு சமைக்கும் போது தனிக் கவனம் செலுத்தவேண்டும். சமைக்கும்போது கவனிக்க வேண்டியவை.

1.காய்கறிகளை நிறைய உபயோகிக்க வேண்டும்

2.அவித்தல், வேகவைத்தல் முதலியவை சாலச் சிறந்தது

3.வறுவல் மற்றும் பொரியல் எப்போதாவது ஒரு முறை மட்டும் செய்க.

4.ஒரு முறை பொரித்த எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க.

5.மிச்சம் மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு.

6.சமையலில் எண்ணெய், தேங்காய் முதலியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும்

7.ஊறுகாய், அப்பளம் முதலியவை தினசரி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

உடலுக்கு உகந்த உணவுகள்

தானிய வகைகள்

அரிசி, கோதுமை முதலியவை நல்ல தானிய வகை உணவினங்களாகும். கோதுமையை அவற்றின் தவிட்டுடன் உபயோகிப்பதே நல்லது. கோதுமையின் தவிட்டை சுத்திகரித்து உருவாக்கப்பட்ட மைதா மாவு உடல் நலத்துக்கு உகந்ததல்ல.

பயிறு மற்றும் பருப்பு வகைகள்

கடலை, பயிறு மற்றும் பருப்பு வகைகள் நல்ல ஆரோக்கிய உணவுகளாகும். கடலையைத் தொலியுடன் உண்பதே நல்லது. உடலுக்குத் தேவையான புரேதச் சத்துக்கள் பயிறு மற்றும் பருப்பு வகைகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்க.

காய்கறிகள் கீரைகள் மற்றும் பழ வகைகள்

உடலுக்கு மிகவும் அத்தியவசியமான தாதுக்கள், மற்றும் ஃபைபர் சத்துக்கள் காய்கறிகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று முறையேனும் கீரைகளை உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். பழவகைகளை தினமும் உட்கொள்க.

பால்

பாலில் நிறைய புரோட்டீன் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு பாலும் பால் உற்பத்திப் பொருட்களும் சிறந்த உணவாகும். ஆனால் வயது முதிர்ந்தவர்கள் பாலை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மீன்

மீன் சிறந்தாரு உணவாகும். மீனை தினசரி உணவாகவே உட்கொள்ளலாம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நல்ல கொழுப்புச் சத்துக்கள் மீன்களில் அடங்கியுள்ளன. மீனைப் பொரியல் வறுவல் செய்வதை விட வேகவைத்து உண்பது சிறந்தது.

இறைச்சி, முட்டை

இறைச்சி வாரத்தில் ஓரிரு முறைகள் மட்டும் உட் கொள்க. மட்டன் பீஃப் போன்றவை குறைந்த அளவில் மட்டும் உட்கொள்க. அவற்றின் கொழுப்புகள் இதயத்துக்கு ஊறு விளைவிக்கும்.

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. முதியவர்கள் முட்டை உண்பதைக் குறைக்க வேண்டும். வாரத்தில் ஒன்றோ இரண்டோ உட்கொள்க. குழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாதி வேகவைத்த முட்டை கொடுக்கலாம். முட்டையின் வெள்ளைக் கரு தினமும் கொடுக்கலாம். முட்டை, இறைச்சி, முதலியவற்றை வறுவல் அல்லது பொரியல் செய்து உண்பதைத் தவிர்க்கவும்.

சர்க்கரை, நீரிழிவு நோயாளிகள் கவனிக்க

1.இனிப்பு உண்பதைத் தவிர்க்க.

2.எண்ணெய், தேங்காய் முதலியவை உபயோகிப்பதில் கட்டுப்பாடு வருத்தவும்

3.சரியான நேரத்தில் உண்ணவும்

4.வறுவல் பொரியல் முதலியவை உண்பதை விட்டு விடவும்

5.பழ வகைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டுக்கு அதிகம் வேண்டாம்

6.காய்கறிகள், கீரைகள் உணவில் சோ்த்துக் கொள்க.

7.தோல் அகற்றிய கோழிக்கறி உண்ணலாம். மாட்டுக் கறி உண்பதைத் தவிர்க்கவும்

8.புரோட்டா, பேக்கறி ரொட்டிகள், கேக், ஸாஃப்ட் டிரிங்க்ஸ், முட்டையின் மஞ்சள் கரு முதலியவற்றை தவிர்த்து விடவும்.

9.உப்பின் அளவைக் குறைக்கவும்.

10.தவிட்டுடன் கூடிய தானியங்களை உட்கொள்ளவும்

11.பாலின் அளவைக் குறைக்கவும். தினமும் 250 மில்லி அளவில் அதிகமாக வேண்டாம்.

12.உணவின் அளவில் கட்டுப்பாட தேவை

13.எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் வரை நீர் அருந்தவும்.

14. டீ, காஃபி அதிகமாகக் குடிக்கக் கூடாது

சர்க்கரை, கொழுப்பு மற்றும் இனிப்பு பதார்த்தங்களை எல்லா வயதினரும் குறைப்பதே சிறந்தது

சும்மா விளையாட்டுதான்

நோன்பு மாசம் வந்தா நம்மூரு பிள்ளைகள் சைக்கிளில் பலூன் கட்டி நம்ம தெருவை "களை" கட்டுவார்கள் ஆனால் சவூதியில் கொஞ்சம் வித்தியாசம் அவ்வளவுதான்
--------------**********************-------------------------****************

புரிதலில் நன்று புரியாமல் போவதன்று


பொதுவாகவே தவறாக புரிந்துகொள்வோர் நம்மில் நிறையவே உண்டு,அதுவும் தவறாக புரிந்துகொள்வதற்கென்றே அவதாரம் எடுத்ததுபோல் தவறாக விளங்கிக்கொள்வோர் நிறைய உண்டு.உண்மையில் இவர்களை கண்டு நமக்கு பெரும் பயமுண்டு
ஒரு நாள் பாடம் நடந்துக்கொண்டு இருந்தது.ஆசிரியர் கேட்டார் பிள்ளைகளா நான் நடத்திய பாடம் விளங்கியதா?
தலை ஆட்டினார்கள் மாணவர்கள் ஆம் விளங்கியது என்று;
ஆனால் வெளியில் வந்தபின் மாணவர்களில் பலர் என்ன நடத்தினார் என்றே தெரியவில்லை
என தமக்குள் பேசிக்கொண்டனர்.
இப்படித்தான் வாழ்க்கையிலும் பலர் புரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
திருமணமான புதிதில் சிலருக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போலவும்,கல்லூரியில் சேர்ந்த பின் கண்ணை கட்டுவது போலவும், வியாபாரத்தை ஆரம்பித்தபின் தலை சுற்றுவது போலவும்,முடிவு எடுத்தபின் தடுமாறுவது போலவும் இருக்கும்,தள்ளாடல்களில் பல, இப்படி புரியாமல் போனதின் விளைவே.
சரி என்னதான் செய்வதாம்.
முதலில் புரிதல் பலமானதாக இருக்கவேண்டும்.இரண்டாவதாக செய்வதை புரிந்து இருக்கவேண்டும்.முடிவு எடுத்தபின் செயலில் முன்முயற்சி வேண்டும் பின்வாங்குவது எப்படி என்று யோசிக்க கூடாது

இதுவா ? வாழ்க்கை? இதுவல்லவே வாழ்க்கை.


நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சவால்நிறைந்த வாழ்க்கை
ஊர்ஜிதமில்லா வாழ்க்கை,
நிரந்தரமில்லா வாழ்க்கை,
பிரச்சனைகளுடனான வாழ்க்கை
ஏற்றத்தாழ்வுள்ள வாழ்க்கை.
வியாதி உடனான வாழ்க்கை,
பொறாமையாளர்கள் வீழ்த்த நிணைக்கும் வாழ்க்கை
முடிந்துபோகும் வாழ்க்கை
மொத்தத்தில் மேல்காணப்படும் ஏதாவதொன்றுடனே மடியும் வாழ்க்கை
முடியும் வாழ்க்கை.
ஆஹா இத்தனை பிரச்சனைகளிலும் மனிதன் தான் என்னவோ []பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாம் ஆண்டு வாழ்பவனை போலல்லவா அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்படியே ஓடிக்கொண்டிருக்கும் அவனது வாழ்க்கை திடீரென்று ஒருநாள் நிறுப்படுகின்றபோது,அவன் கட்டிய பல்லாண்டு கால கனவு தவிடு பொடியாகின்றது.அக்கடைசி நிமிடத்தில் விழித்து கொள்கிறான்,.தன் சொத்து முழுவதும் எழுதி தரவும் முன்வருகிறான். ஆனால் அவனது ஆசையை நிறைவேற்ற யாரும் முன்வரமாட்டார்கள்.ஏனெனில் இந்த சந்தர்ப்பத்தை தானே மற்றவர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்தார்கள்.
படித்தவர்களும் பண்பட்டவர்களும் பண்டிதர்களும் அனுபவஸ்தர்களும் படிக்கமறந்த கடைசிபாடம் அல்லவாஇது? இப்பாடத்தில் முதல்கோணல் முற்றும் கோணலல்ல! முடிவுக்கோணலே முழுகோணல்!
இத்தேர்வில் தவறியோர் மறுதேர்வு எழுத அணுமதியில்லை
மறு நுழைவுக்கும் வழியும் இல்லை.
கை பிசைந்து நிற்கும் அவலநிலை.
வாழ்க்கையின் வெளிச்சத்திலிருந்தவர்களுக்கு வாழ்க்கையே இருட்டாகி போன நிலை,
உதவியற்ற உதவாக்கரை நிலை
நிலைதடுமாறிப்போன நிலை.
நிலையென்று நிணைத்தமைக்காக
நித்தம் வருந்துகின்ற நிலை.
இந்த இழிநிலைபற்றி யாரும் சொல்லவில்லையே என அங்கலாய்க்க முடியாத நிலை.
வருத்தப்பட்டும் தவிர்க்க வழியில்லா நிலை
மேலும் வருத்தப்பட்டும் ‘’முடிவு’’ தேடமுடியா நிலை
மொத்தத்தில் எந்தவழியும் இல்லாநிலை
இழிநிலை.
இந்நிலை.?
நிலைதடுமாறியோருக்கு கண்டிப்பாக வரும் நிலை
என்னதான் செய்வது?
செய்யலாமே நிறைய
தற்போதைய உன்வாழ்க்கைதான் மறு[மை]வாழ்வுக்கு
மருந்து
பரிகாரம்.
பலன்.
முன் ஜாக்கிரதை.
படிப்பு
பாடம்
எல்லாம்.
ஆம் அனைத்தும் குர்ஆனில் சொல்லப்பட்டதுதானே
எங்கே சென்று இருந்தாய் நீ
மறந்தாய்
மறக்கப்படுகிறாய்
மறுத்தாய்
மறுக்கப்படுகிறாய்
படித்த கட்டுரைகளுடன் குர் ஆன் வசனத்தை ஒப்பிட்டு பார்
வாழ்க்கையின் பாடத்தில் வழுக்கிவிழுந்தவர்கள்
மகிழ்ச்சியைதேடி அதை தொலைத்தவர்கள்
பலனென்று எண்ணி படுகுழியில் விழுந்தவர்கள்
உதவி செய்ய ஆளிருந்தும் உதவி பெறமுடியாதவர்கள்
மொத்தத்தில் தப்புக்கணக்கு போட்டவர்கள்
உன் குரல் கூட கூப்பாடாய் அல்லவா மொழியப்படுகிறது.

காலத்தே உதவி


மனிதன் மிருகங்களிலிருந்து எத்தனையொ விஷயங்களில் வேறுபடுகின்றான்.
சிரிப்பு,பேச்சு,நாகரீகம்,அறிவு என்று நிறைய சொல்லலாம்.
அவற்றில் இன்னும் ஒரு குணத்தில் மனிதன் வித்தியாசபடுகின்றான்.
அது? உதவும் குணம்தான்.ஆம்
உதவுபவனைதான் இறைவனும் விரும்புகின்றான்.உதவிசெய்வதால் உதவுபவருக்கே எத்தனை பெரிய உதவிகள் கிடைக்கிறது தெரியுமா? முதலில் அல்லாஹ்வின் உதவி கிடைக்கிறது.அடுத்து உதவி பெறும் மனிதனே தக்க சமயத்தில் அவனுக்கு திருப்பி உதவி விடுகிறான்.இவனின் உதவியை பார்க்கும் மூன்றாவது நபர், தான் உதவி பெறாத பட்சத்திலும் இவனின் உதவியை மெச்சுகிறார். உதவிய பொருள் ஏதாவது ஒரு வகையில் அல்லாஹ் திருப்பி கொடுக்கிறான் وماأنفقتم من شيء فهو يخلفه القرآن மறுமையிலும் அபரிமித நண்மைகள் கிடைக்கிறது,அது மட்டுமல்ல உதவிக்கு உதவியேஅன்றி வேறில்லை
هل جزاء الإحسان إلا الإحيان

நட்புக்கு இலக்கணம்

என்னை பற்றி

My Photo
DUBAI, DUBAI, United Arab Emirates
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.பிறரிடம் கற்கவேண்டியதோ ஏராளம்.நடமாடும் அறிவுக்களஞ்சியமாய் என் முன் நடமாடும் அத்துனை மனிதர்களையும் மதிக்கிறேன்,அவர்களினின்றும் பாடம் கற்கிறேன்.இதோ கீழிருக்கும் மீன்கள் உணவு தேடி அலைகிறது என்பதும் ,இல்லை, விஷயம் தேடி அலைகிறது என்பதும், அவரவர் அறிவு சார்ந்த விஷயத்திற்கே விட்டு விடுகின்றேன்.

Fish

My Blog List

5