
மனிதன் மிருகங்களிலிருந்து எத்தனையொ விஷயங்களில் வேறுபடுகின்றான்.
சிரிப்பு,பேச்சு,நாகரீகம்,அறிவு என்று நிறைய சொல்லலாம்.
அவற்றில் இன்னும் ஒரு குணத்தில் மனிதன் வித்தியாசபடுகின்றான்.
அது? உதவும் குணம்தான்.ஆம்
உதவுபவனைதான் இறைவனும் விரும்புகின்றான்.உதவிசெய்வதால் உதவுபவருக்கே எத்தனை பெரிய உதவிகள் கிடைக்கிறது தெரியுமா? முதலில் அல்லாஹ்வின் உதவி கிடைக்கிறது.அடுத்து உதவி பெறும் மனிதனே தக்க சமயத்தில் அவனுக்கு திருப்பி உதவி விடுகிறான்.இவனின் உதவியை பார்க்கும் மூன்றாவது நபர், தான் உதவி பெறாத பட்சத்திலும் இவனின் உதவியை மெச்சுகிறார். உதவிய பொருள் ஏதாவது ஒரு வகையில் அல்லாஹ் திருப்பி கொடுக்கிறான் وماأنفقتم من شيء فهو يخلفه القرآن மறுமையிலும் அபரிமித நண்மைகள் கிடைக்கிறது,அது மட்டுமல்ல உதவிக்கு உதவியேஅன்றி வேறில்லை
هل جزاء الإحسان إلا الإحيان

0 comments:
Post a Comment